எச்சிலில் உள்ள பாக்டீரியாவின் மூலம் புற்றுநோயைக் கண்டறிய முடியுமாம்


எச்சிலில் உள்ள பாக்டீரியாவின் மூலம் புற்றுநோயைக் கண்டறிய முடியுமாம்: - ஆய்வில் தகவல்












எச்சிலில் உள்ள பாக்டீரியாவின் மூலம் கணையப் புற்றுநோயை கண்டறிய முடியும் என்று சான்டியாகோ மாநிலப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆரோக்கியமான மனிதனுடன் ஒப்பிடும்போது கணையப் புற்று நோய்களைக் கொண்டவர்களின் எச்சில் உள்ள பாக்டீரியாக்களின் தன்மை வேறுபட்டிருக்கும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். கணையப் புற்றுநோய் ஆரம்பகாலத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் நோயாளிகளில் 21.5 சதவிகிதம் பேர் ஐந்து வருடங்கள் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பு உள்ளதக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 
சான்டியாகோ மாநிலப் பல்கலைக்கழக ஆய்வாளர் பெட்ரோ டோரெஸ் தலைமையிலான குமுவினர் 68 ஆண்கள் மற்றும் 63 பெண்கள் உட்பட 113 நோயாளிகளிடம் கணைய நோய்த் தாக்கம் குறித்த ஆய்வினை மேற்கொண்டனர். அப்போது, சோதிக்கப்பட்டவர்களில் 14 பேர் கணையப் புற்றுநோயாலும், 13 பேர் பிற கணைய நோய்களாலும், 22 பேர் வேறுவிதமான புற்றுறோய் தாக்கங்களினாலும், 10 பேர் எந்தவித நோயுமின்றி ஆரோக்கியமாகவும் இருப்பது கண்டறியப்பட்டது.

இவர்களில் கணைய நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எச்சிலில் லெப்டோடிரிக்கியா, கேம்பிலோபெக்டர் என்ற இரண்டு பாக்டீரியாக்களின் அளவு அதிகமாக இருந்தது தெரியவந்தது. இந்த கண்டுபிடிப்புகளின் மூலம் நோய்த்தாக்கத்தினைப் பற்றி முன்னரே அறிந்துகொண்டு சிகிச்சை பெறுவது எளிதாக இருக்கும் என்று டோரெஸ் நம்பிக்கை தெரிவிக்கின்றார். ஆனால் பெரும்பான்மையான நோயாளிகளுக்கு நோய் முற்றும் வரை இதற்கான அறிகுறிகள் வெளித்தெரிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Like me

இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?
புதிய பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு "பதிவு செய்க" பொத்தானை சொடுக்கவும். பிறகு உங்களுடைய மின்னஞ்சலுக்கு வரும் "activation link"ஐ கிளிக் செய்ய மறக்காதீர்கள்..

Related

உடல்நலம் 1292619191272243835

Post a Comment

emo-but-icon

Hot in week

Hot In Month

item